சந்தேகத்தின் பேரில் பயணியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள்: ஆசனவாய்க்குள் மறைத்துவைத்திருந்த பொருள்
பாலித்தீவுக்கு வந்த இந்தியர் ஒருவரை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள், அவர் தனது ஆசனவாய்க்குள் ஆணுறை ஒன்றை மறைத்துவைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
பாலித்தீவில் சிக்கிய இந்தியர்
தாய்லாந்தின் தலைநகராகிய பாங்காகிலிருந்து பாலித்தீவுக்கு விமானத்தில் பயணித்த இந்தியப் பயணி ஒருவரை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனையிட்டனர்.
எக்ஸ்ரேயில், அவர் தனது ஆசனவாய்க்குள் எதையோ மறைத்துவைத்திருப்பது தெரியவந்தது.
Image: Getty Images
மறைத்துவைக்கப்பட்டிருந்த அந்த பொருள்
அந்த நபர் எட்டு பிளாஸ்டிக் பைகளில் 932 வைரங்களை வைத்து, அந்த பைகளை ஒரு ஆணுறைக்குள் வைத்து, அந்த ஆணுறையை தன் ஆசனவாய்க்குள் மறைத்துவைத்துள்ளார்.
அந்த வைரங்களின் எடை 40.73 காரட் அல்லது 8 கிராம் ஆகும்.
அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்திலுள்ள தனது முதலாளி, தன்னிடம் அந்த வைரங்களைக் கொடுத்து பாலித்தீவிலுள்ள ஒருவரிடம் கொடுக்கச் சொன்னதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் வைரம் கடத்தியதாக குற்றம் நிரூபிக்கப்படுமானால், அவர் 18 ஆண்டுகள் சிறையில் செலவிடவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Getty Images