இப்போது நானும் ஒரு தாய்! பிள்ளைகளுக்காக பாலினத்தையே மாற்றிய நபர்
ஈக்குவடார் நாட்டில் நபர் ஒருவர் தனது பிள்ளைகளுக்காக பாலினத்தை பெண்ணாக மாறிய சம்பவம் நடந்துள்ளது.
மனைவியை விவாகரத்து செய்த நபர்
தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் ராமோஸ் என்ற நபர் தனது மனைவியை விவாகரத்து செய்திருந்தார். அந்நாட்டின் சட்டப்படி தாயிடம் தான் பிள்ளைகள் வளர வேண்டும்.
இதனால் ராமோஸ் தனது பெண் பிள்ளைகளை பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மகள்களை தன் வசம் அழைத்துச் செல்ல அவர் செய்த காரியம் தான் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மகள்களுக்காக பாலினத்தை மாற்றிய தந்தை
ராமோஸ் சட்டப்பூர்வமாக தன் பாலினத்தை பெண்ணாக மாற்றியுள்ளார். விவாகரத்து வழக்குகள் ஆண்களை விட பெண்களுக்கு தான் சாதகமாக இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
தற்போது ராமோஸின் அனைத்து சட்ட அடையாள ஆவணங்களிலும் 'FEMENINO' என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கும் மேலாக தனது மகள்களை சந்திக்கவில்லை என்றும், தனது மனைவியின் வீட்டில் அவர்கள் மோசமான சூழலில் அவதிப்படுகிறார்கள் என்றும் ராமோஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
நானும் ஒரு தாய் என கூறும் தந்தை
மேலும், பாலினத்தை மாற்றியது குறித்து அவர் கூறுகையில்,
'பெண்ணுக்கு தான் உரிமை உள்ளது என சட்டங்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில் நான் பெண். இப்போது நானும் ஒரு தாய், அப்படி தான் என்னை உணர்கிறேன்.
எனது பாலுணர்வு பற்றி நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதனால் ஒரு தாயின் அன்பையும், பாதுகாப்பையும் என்னால் கொடுக்க முடியும்' என தெரிவித்துள்ளனர்.