லிவர்பூல் எஃப்.சி கோப்பை அணிவகுப்பில் கார் விபத்து: தொழிலதிபர் மீது பாய்ந்த குற்றச்சாட்டுகள்!
லிவர்பூல் எப்.சி கோப்பை அணிவகுப்பில் நிகழ்ந்த கார் விபத்து சம்பவத்தில் ஒருவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
53 வயது தொழிலதிபர் கைது
லிவர்பூல் எஃப்.சி.யின் அண்மைய கோப்பை அணிவகுப்பின்போது, கூட்டத்திற்குள் கார் புகுந்த சம்பவம் தொடர்பாக 53 வயது நபர் ஒருவர் மீது பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மெர்சிசைட் காவல்துறை, குற்றம் சாட்டப்பட்டவரை பால் டோய்ல் என அடையாளம் கண்டுள்ளது.
இவர் லிவர்பூலின் வெஸ்ட் டெர்பி பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் மூன்று குழந்தைகளின் தந்தை ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக இவர் மீது மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
டோய்ல் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்
டோய்ல் மீதான குற்றச்சாட்டுகளில், கொடிய காயங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சட்டவிரோத மற்றும் தீங்கிழைக்கும் காயத்தை ஏற்படுத்தியதாக இரண்டு வழக்குகளும், கொடிய காயங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சட்டவிரோத மற்றும் தீங்கிழைக்கும் கொடிய காயத்தை ஏற்படுத்தியதாக இரண்டு வழக்குகளும் அடங்கும்.
மேலும், கொடிய காயங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சட்டவிரோத மற்றும் தீங்கிழைக்கும் கொடிய காயத்தை ஏற்படுத்த முயன்றதாக இரண்டு வழக்குகளும், அபாயகரமான ஓட்டுதல் தொடர்பான ஒரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு நபர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பானது.
டோய்ல் வெள்ளிக்கிழமை லிவர்பூல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |