இந்தியாவை உலுக்கிய மற்றொரு சம்பவம்: போதைக்கு அடிமையான மனைவியை துண்டுதுண்டாக வெட்டி வீசிய நபர்

Police spokesman Uttar Pradesh Crime Death
By Ragavan Nov 24, 2022 03:53 PM GMT
Report

போதைக்கு அடிமையான மனைவியை தனக்கு துரோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கொலை செய்து 10 துண்டுகளாக வெட்டிய வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.

அதிர்ச்சியூட்டும் ஷ்ரதா வால்கர் கொலை வழக்கைத் தொடர்ந்து, இப்போது இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தின் சீதாபூரில் 46 வயது நபர், போதைக்கு அடிமையான தனது மனைவியைக் கொன்று அவரது உடலை 10 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கொலை

குற்றம் சாட்டப்பட்ட பங்கஜ் மௌரியா தனது மனைவி தனக்கு துரோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கொலை செய்தாக கூறியுள்ளார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.

இந்தியாவை உலுக்கிய மற்றொரு சம்பவம்: போதைக்கு அடிமையான மனைவியை துண்டுதுண்டாக வெட்டி வீசிய நபர் | Man Chops Drug Addict Wife Into 10 Pieces Crimefastmailnews

அவரது மனைவி ஜோதியின் (38) துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கொலை ஆயுதத்தை பொலிஸார் கண்டுபிடித்த பிறகு, பங்கஜ் மௌரியா கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

போதைப்பொருள் அடிப்பதற்காக ஜோதி மோசமான கும்பலுடன் சுற்றித் திரிந்ததால், ஜோதியை துரோகம் செய்ததாக மௌரியா சந்தேகிக்கத் தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் மௌரியா, அவளைக் கொல்லத் தீர்மானித்ததாகக் கூறினார்.

பெண்ணின் உடல் பாகங்கள்

நவம்பர் 8-ஆம் திகதி குல்ஹேரியா கிராமத்தின் காடுகளில் சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை பொலிஸார் மீட்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த பெண்ணின் உடல், வலது கை மற்றும் கால்களை பொலிஸார் மீட்டதாக சீதாபூர் காவல்துறை ஊடகங்களுக்கு தெரிவித்தது.

பின்னர் தடயவியல் நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டது. உடல் உறுப்புகள் ஒரு பெண்ணுடையது என்று உறுதிசெய்யப்பட்டது. அடையாளத்தை உறுதி செய்வதற்காக பொலிஸார் தலையை தேடும் போது, இச்சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்ணின் தலை

சில நாட்களுக்குப் பிறகு, ஒரு பெண்ணின் தலை சிதைந்த நிலையில் பொலிஸார் கண்டெடுத்தனர். அதைனைவைத்து நிபுணர்களின் உதவியுடன் ஒரு ஓவியத்தை உருவாக்கி, அதன் நகல்கள் பாரபங்கி, சீதாபூர், ஹர்தோய், ரேபரேலி, லக்னோ மற்றும் சுல்தான்பூர் ஆகிய இடங்களில் பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிய விநியோகிக்கப்பட்டன. 

பின்னர், இறந்தவரின் தாய் பொலிஸைத் தொடர்புகொண்டார். உடலில் இருந்து மீட்கப்பட்ட அவரது ஆடைகளை காட்டியபோது, ​​​​அவை அவரது மகள் ஜோதியின் உடைகள் என்பதை அவர் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார்.

பங்கஜ் கைது

அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதும், நவம்பர் 15 முதல் காணாமல் போன பங்கஜை பொலிஸார் தேட ஆரம்பித்தனர்.

இந்தியாவை உலுக்கிய மற்றொரு சம்பவம்: போதைக்கு அடிமையான மனைவியை துண்டுதுண்டாக வெட்டி வீசிய நபர் | Man Chops Drug Addict Wife Into 10 Pieces Crimefastmailnews

நவம்பர் 20 அன்று, பொலிஸார் பங்கஜைக் கண்டுபிடித்து, அவருடைய மனைவி எங்கிருக்கிறார் என்று கேட்டனர், அதற்கு அவரால் திருப்திகரமான பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. பின்னர் கடுமையான தொடர் விசாரணைக்குப் பிறகு, அவர் தனது மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

இரு தினங்களுக்கு முன் (செவ்வாய்க்கிழமை) ஒரு பொலிஸ் குழு அவரது வீட்டில் சோதனை நடத்தியது மற்றும் இரத்தக் கறை படிந்த ஆடைகள் மற்றும் கூர்மையான கத்தியை மீட்டெடுத்தது, அதன் பிறகு அவர் முறையாக கைது செய்யப்பட்டார்.

பங்கஜின் ஒப்புதல்

அவர் ஒரு மெடிக்கல் ஸ்டோரில் பணிபுரிந்ததாகவும், இரவு வெகுநேரம் தான் வீடு திரும்புவதாகவும் பங்கஜ் பொலிசாரிடம் தெரிவித்தார். “ஜோதி அடிக்கடி ஆண்களுடன் காணப்படுவதையும் போதைப்பொருள் உட்கொள்ளத் தொடங்கியதையும் அக்கம்பக்கத்தினரிடம் இருந்து அறிந்தேன். நான் அவளுடைய குடும்பத்தை அணுக முயற்சித்தேன், ஆனால் அவர்களும் உதவி செய்யமுடியவில்லை." என கூறியுள்ளார்.

நவம்பர் 8-ஆம் திகதி இரவு, கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் ஜோதியைக் கொன்று, அவரது நண்பரான துஜான் பாசியின் உதவியுடன் அவரது உடலை பல துண்டுகளாக வெட்டினார் என்று பங்கஜ் கூறினார்.

வீட்டில் இருந்து ஏழு கிமீ தொலைவில் உள்ள வயல்வெளியில் உடல் உறுப்புகள் வீசப்பட்டன. குற்றத்தை நிறைவேற்றுவதற்கு முன் பங்கஜ் தனது இரண்டு மகள்களையும் மகனையும் தனது மாமாவின் இடத்திற்கு அனுப்பியதாக தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US