விமானத்தில் பயணித்த கணவனும் கர்ப்பிணி மனைவியும்: விமானம் தரையிறங்கியபோது காத்திருந்த அதிர்ச்சி
இத்தாலி நாட்டவர்களான ஒரு தம்பதியர் தங்கள் உறவினர்களைக் காண விமானத்தில் புறப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர, அந்த மனைவிக்கோர் பேரதிர்ச்சி காத்திருந்தது.
விமானத்தில் பயணித்த கணவனும் கர்ப்பிணி மனைவியும்
இத்தாலி நாட்டவர்களான Giuseppe Stilo (33)ம் அவரது மனைவியான Federica Marrellaவும் தங்கள் உறவினர்களைக் காண Turin என்னுமிடத்திலிருந்து Lamezia Terme என்னுமிடத்துக்குச் செல்ல விமானத்தில் புறப்பட்டுள்ளார்கள்.
விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் Giuseppeக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு கணவருடைய இருக்கையின் அருகில் இடம் கிடைக்காததால், விமானத்தில் மறு முனையில் அவர் அமர்ந்திருந்திருக்கிறார்.
Credit: Jam Press
Federica ஐந்து மாத கர்ப்பிணி என்பதால், அவரிடம் விடயத்தைக் கூறாமலே விமானத்திலிருந்த மருத்துவர்கள் Giuseppeக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்துள்ளார்கள். ஆனால், அவர்களால் அவரைக் காப்பாற்றமுடியாமல் போயுள்ளது.
விமானத்தை விமானிகள் புறப்பட்ட இடத்துக்கே திருப்ப, விமானம் தரையிறங்கியபிறகுதான் தன் கணவர் உயிரிழந்த விடயமே Federicaவுக்கு தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
Credit: Jam Press
தந்தையாகும் மகிழ்ச்சியிலிருந்த கணவர்
விடயம் என்னவென்றால், தம்பதியருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் திருமணம் ஆகியுள்ளது. Federica ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தந்தையாகும் மகிழ்ச்சியில் இருந்துள்ளார் Giuseppe.
Credit: PA
ஆனால், மனைவி குழந்தையைப் பெற்றெடுக்கும் அந்த மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்காமலே உயிரிழந்துவிட்டார் அவர்!
Credit: Jam Press
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |