பிரித்தானியாவில் பீட்சா சாப்பிட்ட இளைஞர் பரிதாப மரணம்
பிரித்தானியாவில், பீட்சா ஆர்டர் செய்து சாப்பிட்ட ஜேம்ஸ் அட்கின்சன் 23 ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவர் ஆர்டர் செய்த உணவில் உள்ள பொருள்களின் உண்மை தன்மை தெரிய வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஜேம்ஸ் அட்கின்சன் 23 என்பவர் கடந்த 2020ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தாடியல் உணவகத்தில் பீட்சா ஒன்றை Deliveroo செயலி மூலம் ஆர்டர் செய்து அவற்றில் ஒருப் பகுதியை மட்டும் சாப்பிட்டுள்ளார்.
அவருக்கு வேர்கடலை ஒவ்வாமை இருந்த நிலையில், அந்த பீட்சாவை உண்ட பிறகு, அவருக்கு சில ஒவ்வாமைகள் ஏற்பட்டு பரிதாபமாக கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், அவரது இறப்பு தொடர்பான மேல்முறையீட்டு மறுஆய்வு மனு கடந்த வியாழக்கிழமை நியூகேஸில் கரோனர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜேம்ஸ் அட்கின்சனின் பெற்றோர் ஸ்டூவர்ட் மற்றும் ஜில், ஆர்டர் செய்யப்பட்ட உணவில் சேர்க்கப்பட்ட பொருள்களின் உண்மை தன்மை குறித்த உண்மையான மறுஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக அவரது தந்தை செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இத்தகைய உணவு ஆர்டர் செய்வதற்கு முன்னாதாக, ஒவ்வாமை குறித்த ஆம் மற்றும் இல்லை என்ற கேள்வி போத்தான்கள் தோன்ற வேண்டும் என்றும், பயனாளர்கள் ஆம் என்ற பொத்தானை கிளிக் செய்தால் சம்பந்தப்பட்ட உணவகம் அந்த பயனாளரை அழைத்து பொருள்கள் குறித்த விளக்கத்தை அளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவரது தாயார் ஜில் பேசுகையில், இது எனது மகனின் உயிரை காப்பாற்றி இருக்குமா என்று தெரியவில்லை ஆனால் நிச்சயமாக இது போன்ற மற்றோரு மோசமான நிகழ்வு ஏற்பாடதாது என்பதால் உணவு பொருள்களின் முழு விவரபட்டியலையும் உணவு நிறுவனங்கள் வழங்கவேண்டும் என கோரிக்கை வழங்கியுள்ளார்.
ஆனால் இதுதொடர்பாக Deliveroo செயலி மற்றும் தாடியல் உணவகம் தெரிவித்த தகவலில், ஒவ்வாமை குறித்த அனைத்து தகவலும் வழங்கபட்டு இருப்பதாகவும், ஜேம்ஸ் அட்கின்சன் இறப்பு குறித்த விசாரணைக்கு நிச்சியமாக ஒத்துழைப்பு வழங்க தயாராக் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பாண் விலையேற்றம்...போராட்டங்களை கட்டுபடுத்த குவிக்கப்படும் ராணுவம்!
மேலும் ஜேம்ஸ் அட்கின்சன் இறப்பு வருத்தம் தருவதாகவும், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களையும் தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.