தேனிலவில் நிகழ்ந்த சோகம்: கடற்கரையில் மின்னல் தாக்கி பலியான இளைஞர்!
புளோரிடாவில் தேனிலவுக்காகச் சென்ற ஒரு 29 வயது இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வார இறுதியில், நியூ ஸ்மைர்னா கடற்கரையில், டேடோனா கடற்கரைக்கு அருகே, ஜேக் ரோசென்க்ரான்ஸ் (29) என்ற இளைஞர் கணுக்கால் ஆழ நீரில் நின்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது. இந்த துயர சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்துள்ளது.
வல்யூசியா கவுண்டி பீச் சேஃப்டி ஓஷன் ரெஸ்க்யூ அதிகாரிகள் மின்னல் தாக்குதலை உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்திலேயே அவசர சேவை ஊழியர்கள் ரோசென்க்ரான்ஸுக்கு உடனடியாக சிபிஆர் (CPR) அளித்து, அவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அடுத்த நாளே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வல்யூசியா ஷெரிப் மைக் சிட்வுட், ரோசென்க்ரான்ஸின் மரணம் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே தனது இரங்கலை முகநூலில் பகிர்ந்திருந்தார். "இந்த இளைஞனுக்கும் அவரது மனைவிக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன்," என்று அவர் எழுதினார்.
“ அவர்கள் தங்கள் திருமணத்தை கொண்டாட எங்கள் கடற்கரைகளுக்கு வந்திருந்தனர். ஒரு பயங்கரமான நொடியில் எல்லாம் மாறிவிட்டது. இந்த இரவில் என் இதயம் அவர்களுக்காக ஏங்குகிறது." என தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |