துப்பாக்கி முனையில் தொழிலதிபர் கடத்தல்! வாகனத்திலிருந்து துணிச்சலாக தப்பிய காணொளி வைரல்
கொலம்பியா நாட்டில் தொழிலதிபர் ஒருவர் கடத்தலில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கி முனையில் கடத்தல்
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் (Bogota) உள்ள கட்டிடம் ஒன்றுக்கு வெளியே, 33 வயதுடைய நபர் ஒருவர் தனது காரில் இருந்து இறங்கியபோது, ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த நபர் அவரை துப்பாக்கி முனையில் கடத்தினார்.
அவருக்கு உதவியாக மற்றொரு நபரும் ஓடிவந்து ஆம்புலன்சிற்குள் அவரை தள்ளினார். பின்னர் அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டது.
எனினும் கடத்தப்பட்ட நபர் ஆம்புலன்சில் இருந்து வெளியே குதித்து தப்பினார். இதுதொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ரியல் எஸ்டேட் நிபுணர்
கடத்தப்பட்ட நபர் தொழிலதிபர் என்று தெரிய வந்தது. மேலும் கடத்திய நபர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினர்.
இந்த நிலையில், ரியல் எஸ்டேட்டில் நிபுணத்துவம் பெற்ற 33 வயது தொழிலதிபருக்கு எந்தவித அச்சுறுத்தலும் வரவில்லை என்றும், கடத்தல்காரர்கள் அவரது நடமாட்டத்தை பின்தொடர்ந்து வந்ததாகவும் EI Tiempo செய்தித்தாளிடம் பெற்ற தகவல் படி பொலிஸ் அறிக்கை சுட்டிக்காட்டியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |