பழைய பேண்ட் பையில் இருந்த லொட்டரி டிக்கெட் - ரூ.57 கோடி வென்ற நபர்
பழைய பேண்ட் பையில் இருந்த லொட்டரி டிக்கெட் மூலம் நபர் ஒருவர் ரூ.57 கோடி பரிசு வென்றுள்ளார்.
ரூ.57 கோடி லொட்டரி
அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த ஒரு நபர் கடந்த 2025 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி பிக்-6 லொட்டரி டிக்கெட்டை எசெக்ஸ் கவுண்டியில் உள்ள ரோஸ்லேண்டில், ஈகிள் ராக் அவென்யூவில் அமைந்துள்ள ஒரு எக்ஸான் எரிவாயு நிலையத்தில் வாங்கியுள்ளார்.
லொட்டரி டிக்கெட்டை வாங்கிய பின்னர் அதனை அப்படியே மறந்து விட்டார்.

அந்த லொட்டரி பரிசை வென்ற யாரும் இன்னும் பரிசுத்தொகையை உரிமை கோரவரவில்லை, விரைவில் காலாவதியான உள்ளது என லொட்டரி நிர்வாகம் அறிவித்த நிலையில், லொட்டரி வாங்குபவர்கள் மத்தியில் விவாதமானது.
இதைத்தொடர்ந்து, அந்த நபர் வழக்கமாக லொட்டரி வாங்கும் எரிவாயு நிலையத்தில் இது குறித்து விசாரித்தார். வீட்டில் தனது லொட்டரி சீட்டை தேடுமாறு அங்குள்ள ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள அலமாரியில் பழைய ஆடைகள் அனைத்திலும் தேடியுள்ளார்.
அப்போது பேண்ட் பையில் பரிசோதித்த போது அந்த லொட்டரி டிக்கெட் கிடைத்துள்ளது. டிக்கெட்டில் உள்ள எண்களைச் சரிபார்த்த பிறகு, 5.9 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.57.11 கோடி) வெற்றி டிக்கெட்டைத் கையில் வைத்திருப்பதை அவர் உணர்ந்தார்.
காலக்கெடு முடிவதற்கு வெறும் 8 நாட்களே இருந்த நிலையில், லொட்டரி தலைமையகத்திற்கு விரைந்து சென்று, பரிசைப் பெற்றுக்கொண்டார்.
வெற்றியாளர்கள் தங்கள் பழைய டிக்கெட்டுகளைத் தொலைத்துவிடுவதால், பல பரிசுகள் உரிமை கோரப்படாமல் போகின்றன என்பதைக் குறிப்பிட்ட லாட்டரி அதிகாரிகள், மக்கள் தங்கள் பழைய டிக்கெட்டுகளைத் தவறாமல் சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |