17 வயது மாணவியிடம் அத்துமீறி நடந்துவிட்டு வேறு நாட்டுக்கு தப்பிய பள்ளி ஊழியர்! 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது.. முழு பின்னணி
அமெரிக்காவில் பள்ளி மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்திவிட்டு வேறு நாட்டுக்கு தப்பியோடிய நபர் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோஸ் மனியுல் என்ற நபர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பள்ளியில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு படித்து வந்த 17 வயது மாணவியிடம் அத்துமீறி பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாணவி பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் ஜோஸிடம் விசாரித்தனர்.
அப்போது தனது குற்றத்தை அவர் ஒப்பு கொண்டார். பின்னர் பொலிசாரிடம் இருந்து தப்பி மெக்சிகோவுக்கு சென்றிருக்கிறார் ஜோஸ்.
இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து பொலிசார் ஜோஸை மெக்சிகோவில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்த வாரத்தில் மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்படும் ஜோஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.