கோடீஸ்வரர் ஆனதையே மறந்த நபர்! அவருக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணம் என்ன ஆனது தெரியுமா? இறுதிநொடி ஆச்சரியம்
அமெரிக்காவில் $195,935 பரிசு லொட்டரியில் விழுந்ததை மறந்த நபர் அதிர்ஷ்டவசமாக இறுதி நேரத்தில் அதை உணர்ந்து பரிசு பணத்தை பெற்றுள்ளார்.
வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் கிரிகோரி வாரேன். மிக அரிதாக லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட இவர் சமீபத்தில் ஒரு சீட்டு வாங்கினார்.
அதில் அவருக்கு $195,935 (இலங்கை பண மதிப்பில் கிட்டத்தட்ட 3,91,65,662.68) பரிசு விழுந்தது. ஆனால் லொட்டரி சீட்டு வாங்கியதையே மறந்துவிட்டார் வாரேன்.
அதாவது தனக்கு சொந்தமான $195,935 பணத்தையே வாங்க மறந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட தனது பரிசை அவர் இழந்த நிலையில் திடீரென சீட்டு அவர் கண்ணில் பட அதற்கு பரிசு விழுந்ததா என பார்த்திருக்கிறார். அப்போது தான் தனக்கு பரிசு விழுந்துள்ளது என்பதை உறுதி செய்து உடனடியாக அரக்க பறக்க சென்று பரிசு பணத்தை பெற்றிருக்கிறார் வாரேன்.
அவர் கூறுகையில், நான் மிக அரிதாகவே லொட்டரி விளையாடுவேன், இந்த முறை சீட்டு வாங்கியதை சுத்தமாக மறந்துவிட்டேன், நல்லவேளையாக இறுதி நேரத்தில் என் பணம் எனக்கு கிடைத்தது.
பரிசு விழுந்தது உறுதியான பின்னர் அதிர்ச்சியில் தூக்கமே வரவில்லை.
பரிசு பணத்தை வைத்து தொழில் தொடங்வேன், மேலும் என் மகன் உயர்நிலை பட்டம் பெறும் போது அவனுக்கு பெரிதாக எதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.