தன் தாய் உட்பட 6 பேரை சுட்டுக்கொன்ற நபர்! முதியோர் இல்லத்தில் பயங்கரம்
குரோஷியாவில் துப்பாக்கிதாரி ஒருவர் தனது தாய் உட்பட 6 பேரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச்சூடு
குரோஷியா நாட்டின் Croatian நகரில் திங்கட்கிழமை முதியோர் இல்லத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
இதில் 5 குடியிருப்பாளர்கள் மற்றும் ஒரு ஊழியர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்கள் பெரும்பாலும் 80 முதல் 90 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. தப்பியோடிய துப்பாக்கிதாரி Daruvar நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் காவலர்
முதற்கட்ட விசாரணையில் முன்னாள் காவலரான அந்நபர் சுட்டுக்கொன்ற நபர்களில் அவரது தாயும் ஒருவர் என தெரிய வந்தது.
அத்துடன் அவர் பல சம்பவங்களை கடந்த காலங்களில் ஏற்படுத்தியதாகவும், அவரின் தாய் 10 ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் வசித்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |