பிரித்தானியாவில் பூட்டிய வீட்டை உடைத்து நுழைந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இரட்டைக்கொலை சம்பவம்
பிரித்தானியாவில் பூட்டி இருந்த வீட்டுக்குள் இரண்டு பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லங்காஷைர் பகுதியில் Higher Walton கிராமத்தில் உள்ள Cann Bridge தெருவில் இருந்து சனிக்கிழமை மதியம் 1.40 மணியளவில் பொலிஸாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் இரண்டு பேருக்கு இதே தவறாக நடந்திருக்கலாம் என கவலைபடுவதாக, அக்கம் பக்கத்தில் வசிக்கும் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் அடிப்படையில், குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார், கதவை தட்டி பார்த்துள்ளனர். அனால், எந்த பதிலும் கிடைக்காததால் சந்தேகித்த பொலிஸார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
துரதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் இருந்த ஆண் பெண் இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.
Photograph: Google Street View
இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், அவர்களின் மரணம் சதேகத்திற்கு உரியதாக கருதப்படுவதாக சனிக்கிழமை மாலை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களில், "அவர்களது கொலைகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 35 வயதான உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கை விசாரிக்க ஒரு பிரத்யேக துப்பறியும் குழு நியமிக்கப்பட்டுள்ளது மற்றும் விசாரணைகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் ரோந்து பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், நவம்பர் 20, 2021-ன் பதிவு எண் 0841ஐ மேற்கோள் காட்டி 101 என்ற எண்ணை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.