எருமை மாட்டிற்கு பயந்து ஒதுங்கியவரை தீண்டிய விஷப்பாம்பு! பிரித்தானியா கனவில் இருந்தவரை தேடி வந்த வினை
பாம்பு கடியால் உயிரிழந்த நபர்.
இறப்பதற்கு முன்னர் மனைவிக்கு அனுப்பிய உருக்கமான செய்தி.
பாம்பு கடித்த காரணத்தால் உயிர் பிரியபோகும் தருணத்தில் மனைவிக்கு இறுதியாக கணவன் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சம்பவத்தின் பின்னணி மனதை உருக்கியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான Mozambiqueல் வசித்து வந்தவர் செபஸ்டின் விக்கர். இவர் அங்கு வசித்தபடி பணி செய்து வந்த நிலையில் குடும்பத்தார் வேறு இடத்தில் வசித்தனர்.
தனது மனைவி மற்றும் குழந்தையை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என செபஸ்டின் ஏங்கி வந்தார். இதையடுத்து வெகுவிரைவில் பிரித்தானியாவின் பகுதியான ஸ்காட்லாந்து நாட்டிற்கு குடும்பத்தாருடன் சென்ற வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பணி விடயமாக தனது வாடிக்கையாளருடன் செபஸ்டின் வெளியே சென்றார். அப்போது அங்கு ஒரு எருமை மாடு இருந்த நிலையில் இருவரும் ஓரமாக சென்றனர்.
mirror
அங்கு மண்மேடு இருந்தது, அதிலிருந்து வெளியே வந்த ஒரு கொடிய விஷப்பாம்பு செபஸ்டினை கடித்தது. இதையடுத்து வலியில் அவர் துடித்தார், அந்த தருணத்திலும் தனது மனைவிக்கு ஒரு வாய்ஸ் மெசேஜை செல்போனில் அனுப்பினார். அதில் எந்தளவு மனைவி அமண்டாவை தான் நேசிக்கிறேன் என்பதை உருக்கமாக கூறியிருந்தார்.
இதை கேட்ட அமண்டா பதறியபடி கணவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அது முடியவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த தொலைபேசி அழைப்பில் செபஸ்டின் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அமண்டா கூறுகையில், பாம்பு கடித்தவுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்திருக்கிறார். செபஸ்டினை கடித்தது காடுகளில் வசிக்கு கோப்ரா நாகமாக இருக்கலாம், ஆப்பிரிக்காவில் அது அதிகம் காணப்படும். மிகுந்த வலி, வேதனையை அனுபவித்து அவர் இறந்திருக்கிறார்.
செபஸ்டினை கடந்த காலங்களில் எருமை தாக்கியுள்ளது, தற்போது எதிரே எருமை வந்த நிலையில் பாம்பு அவரை கடித்ததாக கூறுகின்றனர். அவர் எப்படி கஷ்டப்பட்டிருப்பார் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, இப்போது அதை நினைத்தாலும் மனம் வலிக்கிறது என கூறியுள்ளார்.