நாகப்பாம்புக்கு முத்தம் கொடுத்த நபரின் உதட்டை பதம் பார்த்ததால் அதிர்ச்சி! இறுதியில் நடந்த அதிசயம்
நாகப்பாம்புக்கு நபர் ஒருவர் முத்தம் கொடுத்த போது அது அவரை கடித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பொம்மனகட்டேயை சேர்ந்தவர் சந்தோஷ் (35) இவரது வீட்டு வாசலில் நேற்று நாகப் பாம்பு படமெடுத்து ஆடியது.
இதை பார்த்த சந்தோஷ், பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுத்தார். அவர் வருவதற்குள், பாம்பு அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது.
அங்கு வந்த பாம்பு பிடி வீரர் அலெக்ஸ் (32) புதருக்குள் இருந்த பாம்பை பிடித்தார். பாம்புக்கு முத்தம் தர முயன்றார். அப்போது பாம்பு, அவரது உதட்டில் கொத்தியது.
இதையடுத்து வலியால் துடித்த அலெக்ஸ் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.