பேய் பயத்தால் 36 ஆண்டுகளாகப் பெண்ணாக வாழும் ஆண்.., பின்னணியில் இருக்கும் காரணம்
பேய் பயத்தால் ஒரு ஆண் கடந்த 36 ஆண்டுகளாகப் பெண் வேடத்தில் வாழ்ந்து வரும் சம்பவத்தை தெரிந்து கொள்ளலாம்.
எங்கு நடந்தது?
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஜான்பூரைச் சேர்ந்தவர் சிந்தா. இவர் கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள் போல சேலை அணிந்து வாழ்ந்து வருகிறார்.
பேய்களால் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்ததால் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது, ஆவி தன்னைத் துன்புறுத்தியது என்றும், தான் ஒரு ஆணாக வாழ்ந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றும் அவர் நம்பியதாக தெரிகிறது.
இதனை அறிந்த கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் சிலர், இவருக்கு மனநலம் தொடர்பான பிரச்சனை என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இவருக்கு முறையான ஆலோசனை மற்றும் சிகிச்சை தேவை என்று கூறுகின்றனர்.
இவருக்கு மூன்று திருமணங்கள் நடந்ததாகவும், அதில் 2-வது மனைவியின் மரணத்திற்குப் பிறகு, தனக்கு இந்தக் கனவு வந்ததாக சிந்தா கூறியுள்ளார்.
2-வது மனைவியின் ஆன்மா தொந்தரவு செய்ததாக கூறி, தான் ஒரு பெண்ணை போல வாழ வேண்டும் கட்டாயப்படுத்தியதாகவும் கூறுகிறார். மேலும், இவரது 9 மகன்களில் 7 பேர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |