வெளிநாட்டு பெண்ணை மணந்த இந்திய இளைஞர்! மனைவிக்கு பயமா? வெளியான வீடியோவையடுத்து விமர்சனம்
சமூகவலைதளம் மூலம் காதலாகி வெளிநாட்டு பெண்ணை இந்திய இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
வெளிநாட்டு பெண்ணுடன் இளைஞருக்கு காதல்
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் சந்தீப். இவருக்கும் அமெரிக்காவை சேர்ந்த எரின் என்ற பெண்ணிற்கும் கடந்த 2019ல் சமூகவலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தனர், சிறிது காலத்தில் இருவருக்கும் இடையே ஒரு பாசம் வளர்ந்தது.
பின்னர் சந்தீப் - எரின் தங்கள் காதலை உணர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
திருமணம்
இதையடுத்து எரின் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பறந்து வந்தார். அங்கு இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் தம்பதி தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
சந்தீப் பார்ப்பதற்கு எரினை விட இளம் வயது நபராக தெரிகிறார். இதையடுத்து எரின் சந்தீப்பை அப்படியே தூக்கிய ஜாலியான வீடியோ வெளியாகியுள்ளது.
அதே நேரம் அந்த வீடியோவில் அப்பெண்ணை பார்த்து, சந்தீப் பயப்படுவது போல உள்ளதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
truescoopnews