வீடியோ பார்த்து இந்திய வம்சாவளிப்பெண்ணை கொலை செய்த நபர்: சமீபத்திய தகவல்
லண்டனில் இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்ட பெண்
2024ஆம் ஆண்டு, மே மாதம் 9ஆம் திகதி, லண்டனிலுள்ள Burnt Oak என்னுமிடத்தில், பெண்ணொருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டார். அவர் உதவி கோரி கதற, அக்கம்பக்கத்தினர் அவருக்கு உதவ ஓடியதுடன், பொலிசாருக்கும் தகவலளித்தனர்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த அவசர உதவிக்குழுவினர் அவருக்கு சிகிச்சையளித்தும் அவரை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது. அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
அந்தப் பெண்ணின் பெயர் அனிதா (Anita Mukhey, 66) என்றும், அவர் பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHSஇல் பகுதி நேரப் பணியாற்றி வந்தார் என்றும், அவர் இந்திய வம்சாவளியினர் என்றும் தெரியவந்தது.
அனிதா, இந்தியாவின் புனேயில் பிறந்தவர் ஆவார். அனிதாவின் கணவர் பெயர் ஹரி. தம்பதியருக்கு லைலா, தேவ் என்னும் இரண்டு பிள்ளைகளும், இரண்டு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
சமீபத்திய தகவல்
அனிதாவைக் கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் ஜலால் (Jalal Debella, 22). அவர் எந்த நாட்டவர் என்பதைக் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், ஜலால் கோர வீடியோக்கள் பார்க்கும் வழக்கம் கொண்டவர் என தற்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திகள் முதலான கொடூர ஆயுதங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட ஜலால், அனிதாவைக் கொல்வதற்கு முன், வீடியோ பார்த்து அத்தகைய கத்தி ஒன்றை இணையத்தில் வாங்கியுள்ளார்.
கத்தி வாங்கிவிட்டு, கொலை செய்யும் வீடியோ ஒன்றைப் பார்வையிட்ட ஜலால், பேருந்து நிலையம் ஒன்றில் நின்ற அனிதாவைக் குறிவைத்திருக்கிறார்.
கேசுவலாக சென்று அனிதாவிடம் வம்பிழுத்து அவரை முகத்திலும் வயிற்றிலும் குத்திவிட்டு அங்கிருந்து ரிலாக்சாக நடந்து சென்ற ஜலால், அருகிலுள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் அந்தக் கத்தியை வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
ஜலால் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |