குழந்தையின் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த பயங்கரம்: திடுக்கிடவைத்துள்ள ஒரு செய்தி

Tamil nadu
By Balamanuvelan Apr 09, 2026 06:35 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நபர், தன்னைப் பிரிந்து சென்ற மனைவியைத் தேடிச் சென்ற நிலையில், தன் குழந்தையின் கண் முன்னாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மனைவியைத் தேடிச் சென்ற கணவர்

தமிழ்நாட்டிலுள்ள குடியாத்தம் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் காந்தி. காந்தியின் மனைவி ராசாத்தி. தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். 

குழந்தையின் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த பயங்கரம்: திடுக்கிடவைத்துள்ள ஒரு செய்தி | Man Murdered Infront Of Son By Mother Lover

சமீபத்தில் ராசாத்தி தன் கணவனையும் குழந்தையையும் விட்டு விட்டு நரசிம்முலு என்னும் நபருடன் வாழ ஆந்திராவுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்த குடியாத்தம் என்னுமிடம் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது.

ஆக, காந்தி மனைவியைத் தேடி ஆந்திரா சென்ற நிலையில், அவர் இருக்கும் இடம் தெரியவரவே, ஞாயிற்றுக்கிழமை, தன் குழந்தையுடன் மனைவியை சந்திக்கச் சென்றுள்ளார்.

காந்தியைக் கண்டதும் அவரது மனைவியை அவருடன் அனுப்பிவைப்பதாகக் கூறிய நரசிம்முலு, அவரையும் குழந்தையையும் ஏமாற்றி வனப்பகுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார். 

இந்தியாவின் முதல் கடல் விமானம் - வெற்றிகரமாக சோதனை

இந்தியாவின் முதல் கடல் விமானம் - வெற்றிகரமாக சோதனை

காந்தி, நரசிம்முலு மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து மது அருந்தியபின், குழந்தையின் கண் முன்னாலேயே காந்தியை அடித்துக் கொன்றுள்ளார்கள் நரசிம்முலுவும் அவரது நண்பர்களும்.

பயந்து நடுங்கிய குழந்தை புதர் ஒன்றின் பின்னால் மறைந்துகொண்டிருந்திருக்கிறான். தந்தையைக் கொன்றவர்கள் சென்றதும், அவரது உடல் அருகிலேயே இரவு முழுவதும் இருந்துள்ளான் அவன்.

காலையில் வெளிச்சம் வந்ததும், அங்கிருந்து வெளியே வந்த அந்தச் சிறுவன் அங்கு வந்த கிராம மக்களிடம் நடந்ததைக் கூற, கேட்ட மக்கள் குழந்தையின் நிலை கண்டு பதறிப்போயுள்ளார்கள்.

பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, பொலிசார் காந்தியின் உடலை மீட்டதுடன், நரசும்முலுவையும் அவரது நண்பர்களையும் கைது செய்துள்ளார்கள்.

கண் முன் தந்தை கொடூரமாக கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள குழந்தை, அரசு காப்பகம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளான். பொலிசார் இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US