காதலியை சீரழிக்க முயன்றவரின் பிறப்புறுப்பை வெட்டி காட்டுப் பன்றிக்கு இரையாக்கிய நபர்!
பிரேசில் நாட்டில் தனது காதலியை சீரழிக்க முயன்ற உறவினரின் பிறப்புறுப்புகளை காதலன் வெட்டி காட்டுப் பன்றிகளுக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் Minas Gerais மாகாணத்தில் உள்ள Olhos D'Agua பகுதியில் கடந்த ஏப்ரல் 19-ஆம் திகதி இந்த கொடூர சம்பவம் நடந்த்துள்ளது.
பாதிக்கப்பட்ட 36 வயது நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மருமகள் முறை உள்ள தனது உறவினரின் 20 வயது மகளை கற்பழிக்க முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அப்பெண்ணின் காதலன், தனது உறவினரை கூட்டு சேர்த்துக்கொண்டு தனது காதலியை சீரழிக்க முயன்ற நபரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
திட்டம் போட்ட இருவரும், பெண்ணின் உறவினரை கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை சராமரியாக தாக்கி மயக்கடையச் செய்துள்ளனர்.
பின்னர், கடும் ஆத்திரத்தில் இருந்த பெண்ணின் காதலன், அந்த நபரின் பிறப்பு உறுப்புக்களை (penis மற்றும் testicles) துடிக்கத் துடிக்க கத்தியால் அறுத்து காட்டுப் பன்றிகளுக்கு இரையாக்கிவிட்டனர்.
இரத்த வெள்ளத்தில் கடுமையான வலியில் துடித்துக்கொண்டிருந்த அவர், அங்கிருந்து ஒரு வழியாக Bocaiuva-ல் உள்ள Doutor Gil Alves நகராட்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவரது உடலில் இரத்தப் போக்கை நிறுத்தி, சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் அவரது பிறப்பு உறுப்புகள் கிடைக்காததால் அதனை மீண்டும் ஒட்டவைக்கும் வாய்ப்பும் இல்லாமல் போனதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பதிலாக, அவர் சிரமம் இன்றி இயற்கை உபாதைகளை கழிப்பதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் கூறினர்.
இந்த கொடூர செயலைச் செய்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது உறவினர் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், பெண்ணின் உறவினர்கள் யாரும் கற்பழிக்க முயன்ற நபர் மீது பொலிஸில் புகார் அளிக்கவில்லை என்பதால், அவர் மீது பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டதா என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.