ஹிஜாப் அணியாத 2 பெண்கள் மீது தயிரை ஊற்றிய நபர்: ஈரானில் பரபரப்பை கிளப்பியுள்ள வீடியோ!
ஈரானில் ஹிஜாப் அணியாத இரண்டு பெண்கள் மீது ஆண் ஒருவர் தயிரை ஊற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆடை கட்டுப்பாடு
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பொலிஸ் காவலில் 22 வயது பெண் மஹ்ஸா அமினி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரானில் பெண்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்தது.
AFP
பல மாதங்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில், அதிகப்படியான பெண்கள் நாட்டின் கட்டாய ஆடைக் குறியீட்டை மீறுவதால், ஹிஜாப் இல்லாமல் பொது இடங்களில் தோன்றும் பெண்களுக்கு எதிராக "கருணை இல்லாமல்" வழக்குத் தொடருமாறு ஈரானின் நீதித்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.
பெண்கள் மீது தாக்குதல்
இந்நிலையில் ஈரானின் மஷாத்-தில் உள்ள அங்காடிக்கு சரிவர ஹிஜாப் அணியாமல் வந்த தாய் மற்றும் மகள் மீது ஆண் ஒருவர் தயிரை ஊற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில், ”நாட்டின் தடை செய்யப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக” சரிவர ஹிஜாப் அணியாத இரண்டு பெண்கள் மீது வழக்கு பதியப்பட்டு இருவரையும் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
You may have seen this video of a man in a corner shop in Iran pouring yoghurt over the heads of two women who weren't covering their hair.
— Kian Sharifi (@KianSharifi) April 1, 2023
The man has been arrested for "disturbing public order" & the two women have been detained for showing their hair.pic.twitter.com/GX89hL6dZo
அத்துடன் இரண்டு பெண்கள் மீது தயிரை ஊற்றிய நபர் மீது அவமதிப்பு நடவடிக்கை மற்றும் பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்தல் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் சரிவர அணியாத பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது ஈரான் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.