தேடி வந்த கோடிக்கணக்கான பணம்! தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட நபர்
கோடிக்கணக்கான பணம் பரிசு விழுந்த தகவல் என தெரியாமல் அதை நிராகரித்த நபர்.
இறுதியில் நடந்த சுவாரசியம்.
லொட்டரியில் கோடிக்கணக்கான பரிசு விழுந்தது தொடர்பான தகவலை தெரிவிக்கும் வகையில் வந்த தொலைபேசி அழைப்பை நபர் ஒருவர் எடுக்காமல் நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த 56 வயதான நபர் லொட்டரி விளையாட்டில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு $100,000 பரிசு விழுந்திருக்கிறது. இது தொடர்பான தகவலை அவருக்கு தெரிவிக்க லொட்டரி நிறுவனம் சார்பில் அவருக்கு போனில் அழைப்பு விடுவிக்கப்பட்டது.
ஆனால் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்ததால் அதை அவர் எடுக்காமல் தவிர்த்துள்ளார். அதாவது கோடிக்கணக்கான பணம் வரபோவதை உணராமல் இப்படி செய்திருக்கிறார்.
Getty Images
பின்னர் அதே நாள் இரவு இமெயிலை பார்த்த போதே லொட்டரியில் பரிசு விழுந்ததை உணர்ந்து இன்ப அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் காலையில் வந்த போன் அழைப்பு குறித்து நினைவுக்கு வந்தது, இதையடுத்து தனக்கு வந்த வாய்ஸ் மெசேஜை கேட்ட போது $100,000 பரிசு தகவலை அறிந்து கொண்டார்.
அவ்வளவு பெரிய பரிசு போச்சு என நினைத்து பயந்தபடி தூங்காமல் இருந்த அவர் அடுத்தநாள் காலையில் லொட்டரி நிறுவனத்தை அணுகி நடந்ததை கூறி பரிசை பெற்றுள்ளார்.
பரிசு பணத்தை அவர் சேமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.