நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்: நேரலையில் மனைவியை எரித்துக் கொன்ற கொடூரன்
சீனாவில் தமது முன்னாள் மனைவியை எரித்துக் கொலை செய்வதை ஒருவர் இணையத்தில் நேரலை செய்துள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொடூரமாக கொலை செய்யப்பட்ட 30 வயது Lhamo விவசாயி மட்டுமின்றி, இணையத்தில் நிகழ்ச்சிகளை நேரலை செய்பவர் என தெரிய வந்துள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் குடியிருந்து வந்த இவர், கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ச்சி ஒன்றை நேரலையில் தொகுத்து வழங்கி வந்துள்ளார். அப்போது திடீரென்று அறைக்குள் நுழந்த அந்த நபர் குறித்த பெண்மணி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த Lhamo இரண்டு வாரங்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த நிலையில், குறித்த பெண்மணியின் முன்னாள் கணவர் Tang Lu கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட, வியாழக்கிழமை அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் தீர்ப்பாகியுள்ளது.
நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது எனவும், இது போன்ற கொடூரத்திற்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.