நான் கர்ப்பமாக உள்ளேன்! 11 வயது அதிகமான காதலனிடம் கூறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி... ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி
இத்தாலியில் தன்னை விட அதிக வயது வித்தியாசம் கொண்ட காதலி கர்ப்பமானதால் அவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடானியா நகரில் தான் இந்த சம்பவம் கடந்த 2010 ஜூலையில் நடந்தது. நிகோலா மன்குசோ என்ற நபருக்கு தற்போது 42 வயதாகிறது.
இவருக்கு கடந்த 2010ல் 30 வயதாக இருந்த போது 19 வயதான வெலண்டினா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.
நிகோலாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருந்த நிலையிலேயே வெலண்டினாவுடன் தொடர்பு ஏற்பட்டது.
இந்த காதலை நிகோலாவின் மனைவி கண்டுபிடித்து கணவரை கண்டித்தார். இதையடுத்து வெலண்டினா உடனான தொடர்பை நிகோலா துண்டித்தார்.
அந்த சமயத்தில் வெலண்டினா நிகோலாவிடம் வந்து உன் குழந்தை என் வயிற்றில் வளருகிறது, நான் கர்ப்பமாக உள்ளேன் என கூறினார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த நிகோலா வெலண்டினாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அதை தற்கொலை என பொலிசாரை நம்ப வைக்க முயன்றார்.
ஆனால் பொலிசாரின் தீவிர விசாரணையில் நிகோலாவின் நாடகம் அம்பலமான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
நிகோலா மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி நிகோலாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.