வெட்டப்பட்ட மனித தலையை வாக்குச்சாவடியில் தூக்கி எறிந்த மர்ம நபர்! பிரபல நாட்டில் பயங்கரம்
மெக்ஸிகன் எல்லை நகரமான டிஜுவானாவின் டெர்ராஸாஸ் டெல் வேலே பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் ஒருவர் துண்டிக்கப்பட்ட மனித தலையை வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் இடைக்கால தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் மெக்சிகன் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் வன்முறையாக நடந்துவரும் தேர்தல் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் அறிவித்ததிலிருந்து இதுவரை 97 அரசியல்வாதிகள் கொல்லப்பட்டதாகவும் நடந்துள்ளது. மேலும் 935 கொடூரமான வன்முறை தாக்குதல்கள் நடந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை, டிஜுவானாவின் டெர்ராஸாஸ் டெல் வேலே பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில், மக்கள் வாக்குப்பதிவில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், ஒருவர் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்களை பிளாஸ்டிக் பையில் அடைத்து வீசிச் சென்றுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நபர் தப்பி ஓட முயன்றார், ஆனால் அவர் பிடிபட்டாரா இல்லையா என இதுவரை தெரிவிக்கப்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீசிச் சென்ற உடல் பாகங்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் தேர்தலுடன் தொடர்புடையதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.