புதிய ஐபிஎல் அணியை வாங்க பிரபல பிரித்தானியா கால்பந்து அணி உரிமையாளர்கள் ஆர்வம்! தெரியவந்த முக்கிய தகவல்
மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்களான Glazer குடும்பம், இரண்டு புதிய ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.
2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் பங்கேற்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஒரு அணியின் ஆரம்ப விலை 2000 கோடி என பிசிசிஐ நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.
டெண்டருக்கான அழைப்பு (ITT) ஆவணம் அக்டோபர் 20ம் திகதி வரை வழங்கப்பட்டது.
ITT ஆவணத்தை வாங்கியர்கள் ஏலத்தொகையை 25ம் திகதிக்குள் சமர்ப்பிப்பார்கள் என கூறப்படுகிறது, அடுத்த நாள் ஏலத்தில் வென்றவார்கள் விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ITT ஆவணத்தின் படி வெளிநாட்டு நிறுவனங்கள் ஐபிஎல் அணியை வாங்கலாம், ஆனால் அவர்கள் ஏலத்தில் வெற்றிப்பெற்றால் இந்தியாவில் நிறுவனத்தை நிறுவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரபலமான கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்களான Glazer குடும்பம், பிசிசிஐ-யிடமிருந்து டெண்டருக்கான அழைப்பு (ITT) ஆவணத்தை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
எனினும், அமெரிக்காவைச் சேர்ந்த Glazer குடும்பம், ஐபிஎல் அணியை வாங்க முறையான ஏலத்தில் பங்கேற்குமா என்பது இன்னும் தெரியவில்லை.