நேபாள வெள்ள நிவாரணம்: சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடி செய்த நபர் கைது
nepal man uses chatgpt to fake nepal flood donation: நேபாள வெள்ள நிவாரணத்தில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை நேபாள காவல்துறை கைது செய்துள்ளது.
நேபாள வெள்ள நிவாரணம்
சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.

இதற்கான மீட்பு பணிகளை நேபாள ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவிலிருந்து சுரங்க மீட்பு குழு நேபாளம் சென்று மீட்பு பணிகளில் உதவி வருகிறது.
மேலும், புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் டொலர் வரை செலவாகும் என அரசு ஆரம்பகட்ட மதிப்பீடு செய்துள்ளதாக நேபாள நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேபாள வெள்ள நிவாரணத்திற்கு நிதியளிப்பவர்களை குறிவைத்து நடக்கும் இணைய மோசடி குறித்து நேபாள காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
சாட்ஜிபிடி மூலம் மோசடி
நேபாளத்தின் ராமேச்சாப் மாவட்டத்தில் உள்ள கோகுல்கங்கா ஊரக நகராட்சியைச் சேர்ந்த 32 வயதான பகவான் கர்கி என்பவர், பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு, 1,20,000 நேபாள ரூபாய் பணம் நன்கொடை வழங்கியதாக சாட்ஜிபிடி மூலம் போலியான பரிவர்த்தனை அறிக்கையை உருவாக்கியுள்ளார்.

அந்த அறிக்கையை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அவர், நிவாரண நிதி திரட்டுவதாகக் கூறி தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட ஒரு க்யூஆர் குறியீட்டையும் இணைத்திருந்தார்.
प्रधानमन्त्री दैवी प्रकोप उद्धार कोषको नाममा नक्कली स्टेटमेन्ट बनाएर ठगी गर्ने एक जना पक्राउ#NepalPolice #BelieveinBlue #ToServeandProtect #नेपालप्रहरी pic.twitter.com/CAOx4EExco
— Nepal Police (@NepalPoliceHQ) August 30, 2026
இது குறித்து தகவலறிந்த நேபாள காவல்துறை, மோசடி மற்றும் டிஜிட்டல் தவறான சித்தரிப்பு சட்டங்களின் கீழ் அவரை கைது செய்துள்ளது.
இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நேபாள காவல்துறை, இணையத்தில் பகிரப்படும் இணைப்புகளுக்குப் பதிலாக பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதி என்ற பெயரில் உள்ள அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டும் நன்கொடை வழங்குமாறு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |