2 பெண்களை திருமணம் செய்து ஒருவருக்குகொருவர் தெரியாமல் வாழ்ந்து வந்த இளைஞர்! உண்மை தெரிந்த போது? வைரலாகும் வீடியோ
இந்தியாவில் இரண்டு பெண்களை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவரை இரண்டு மனைவிகளும் சேர்ந்து அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஒடிசா மாநிலம் புபனேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெமுலா பரசுராம். இவர், சொந்தமாக ஆழ்துளை கிணறுக்கு துளையிடும் வண்டி வைத்துள்ளார்.
வண்டி வேலைக்கு செல்வதால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிற்கு வர முடியாது என்று மனைவியிடம் சொல்லியுள்ளார்.
நாளுக்கு நாள் கணவரின் நடத்தையில் வித்தியாசம் தெரிந்ததால், மனைவிக்கு சந்தேகம் எழுந்தது. அதன் பின் ஒரு கட்டத்தில், பரசுராம் மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியவர், மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று கூறியதால், முதல் மனைவி பரசுராமை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
அப்போது, தெலுங்கானா மாநிலத்திலுள்ள கம்மாரெட்டி பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் கணவன் குடும்பம் நடத்திவருவது தெரியவர அதிர்ச்சியடைந்த அவர், வேறு ஒரு பெண்ணுடன் தனது கணவனைப் பார்த்ததால், இரண்டாவது மனைவியை அடிக்கப் பாய்ந்துள்ளார்.
விஷயத்தைக் கேட்டு இரண்டாவது மனைவி அழத் தொடங்கியுள்ளார். அப்போது இரண்டாவது மனைவிக்கும் பரசுராமுக்கு திருமணம் ஆன விவகாரம் தெரியாது என்பது முதல் மனைவிக்கு தெரியவந்துள்ளது.
பரசுராமுக்கு ஏற்கெனவே திருமணமானது தனக்குத் தெரியாது என்று கூறி இரண்டாவது மனைவி அழுதுள்ளார்.
இதையடுத்து இரண்டு மனைவிகளும் சேர்ந்து பரசுராமை கடுமையாகத் தாக்கினர். அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு புகார் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பரசுராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.