திரும்பி வருவேன் அம்மா! வீட்டருகில் வசித்த 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற ஆசிரியருக்கு சிறைக்குள் நேர்ந்த கதி!
அமெரிக்காவில் 7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த கொடூரன் சிறையிலேயே உயிரிழந்துள்ளான்.
நியூ ஜெர்சியை சேர்ந்தவர் ஜோசப் மெகோவன். இவர் பள்ளி ஆசிரியராக வேலை செய்து வந்தார். ஜோசப் வீட்டருகில் ஜோன் (7) என்ற சிறுமி வசித்து வந்தார்.
கடந்த 1973ஆம் ஆண்டு ஜோன் தனது வீட்டில் இருந்து வெளியில் சென்றார். அப்போது, தனது அம்மாவிடம், அம்மா பை, நான் விரைவில் திரும்பி வருவேன் என கூறிவிட்டு சென்றார்.
ஆனால் அதன்பின்னர் ஜோன் திரும்பி வரவேயில்லை. காரணம் ஜோசப் அந்த சிறுமியை தூக்கி சென்று வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறான்.
அடுத்த நாள் சிறுமியின் சடலம் அங்கிருந்த பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொடூரன் ஜோசப்பை பொலிசார் கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்த ஜோசப் சமீபத்தில் அங்கேயே சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
அவர் இறப்புக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.