இந்த பயணம் கடினமானது! கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனுபவங்களை பகிர்ந்த மனிஷா கொய்ராலா
நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் பாம்பே திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழில் முன்னனி நடிகர்களுடன் நடித்து பேரும் புகழும் பெற்றவர். இந்தியன், உயிரே, முதல்வன் என்று அவர் நடித்த படங்கள் நடித்து வந்தவர்.
வட இந்திய பெண்ணான இவரின் நடிப்புக்கு என்றே தனி ரசிக பட்டாளம் இருந்தது. இருப்பினும் இவர் சில ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
2012-ம் ஆண்டு அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகி, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதுமட்டுமின்றி அவர் தனது சுயசரிதையான ஹீல்ட்: ஹவ் கேன்சர் கிவ் மீ எ நியூ லைஃப் என்ற புத்தகத்தை ஜனவரி 8, 2018 அன்று மும்பையில் வெளியிட்டார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டும் உயிர் பிழைத்து வெளிவருவதைப் பற்றி அவர் தனது புத்தகத்தில் எழுதியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் மனிஷா கொய்ராலா தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறுவதாவது,
புற்றுநோயின் கடினமான பயணத்தை கடந்து செல்லும் அனைவருக்கும் நான் வாழ்த்துகூற விரும்புகிறேன்.
இந்த பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர். அதற்கு துணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன்.
இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் பரப்ப வேண்டும் மற்றும் நம்பிக்கை நிறைந்த அனைத்து கதைகளையும் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.
நாம் நமக்கும் உலகிற்கும் கருணை காட்டுவோம். அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்," என்று கூறியுள்ளார்.
மேலும் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்களை நடிகை மனிஷா கொய்ராலா பகிர்ந்துகொண்டுள்ளார்.