இந்த நாட்டில் ஆண்கள் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! ஏன் தெரியுமா?
ஆப்பிரிக்காவின் ஒன்றிய பகுதியில் ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணம் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடான எரித்திரியா பகுதியில் திருமண சடங்குகளில் வித்தியாசமான நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றனர். அதாவது அங்கு வசிக்கும் ஆண்கள் அனைவரும் இரண்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்ய மறுத்தால் மக்களுக்கு சிறையில் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் முதல் மனைவி அவரது இரண்டாவது திருமணத்திற்கு எதாவது ஆட்சேபனை தெரிவித்தால் இருவரும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
எரித்திரியா பல முறை உள்நாட்டுப் போர்கள் நடைபெற்று வருவதால் ஆண்கள் அதிகமாக பலியாகியுள்ளனர். இதன் காரணமாக இங்கு ஆண்களின் எண்ணிக்கை குறைவாகி வருகிறது.
மேலும் நாட்டில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கட்டாயம் ஆண்கள் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் எரித்திரியன் அரசாங்கத்தின் இந்த முடிவு உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.