ஸ்பெயினில் மீண்டும் அமுலாகும் புதிய சட்டம்! வெளியான முக்கிய தகவல்
ஸ்பெயின் நாட்டில் வெளியே செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தின் இறுதியில் ஸ்பெயின் நாட்டில் முககவசம் அணிவது ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்க உள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் தற்போது கொரோனாவின் 6 வது அலையை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற போதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
இதை கருத்தில் கொண்ட ஸ்பெயின் அரசாங்கம் தெருக்களில் முககவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கி உள்ளது.
இந்நிலையில் ஸ்பெயினில் நேற்று மட்டும் சுமார் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.