அமெரிக்காவை புரட்டியெடுக்கும் பாரிய சூறாவளி! 21 பேர் பலி..மேலும் உயரலாம் என அச்சம்
அமெரிக்காவை தாக்கிய பாரிய சூறாவளிக்கு 21 பேர் பலியாகினர்.
பாரிய சூறாவளி
பல மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக பனிப்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் பலத்த புயல் காற்று வீசியது.
@Thomas Metthe/Arkansas Democrat-Gazette/AP
இதனால் உண்டான சூறாவளிக்கு ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னஸி, அயோவா, மிஸ்ஸிஸிப்பி ஆகிய மாகாணங்கள் பெருமளவில் சேதமடைந்தன.
21 பேர் பலி
இதில் 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில் வெள்ளி இரவு முதல் சனிக்கிழமை வரை தாக்கிய புயல்களினால் அலபாமா, மிஸ்ஸிஸிப்பி யில் இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஆர்கன்சாஸின் லிட்டில் ராக் அருகே 2,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சூறாவளியின் பாதையில் இருப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.
@Patrick Lantrip/Daily Memphian via AP