பூங்காவில் விளையாடிய சிறுமி மாயம்... மொத்த கிராமத்தையும் நொறுங்க வைத்த சம்பவம்
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாயமான 4 வயது சிறுமி சிறுத்தையால் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை மொத்தமாக உலுக்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புட்கம் மாவட்டத்திலேயே குறித்த கொடூர சம்பவம் வியாழக்கிழமை நடந்துள்ளது.
வீட்டு தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி ஆதா ஷகில் திடீரென்று மாயமானார். கலக்கமடைந்த குடும்பத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிசார், வனவிலங்கு நிபுணர்கள் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் இரவு முழுவதும் அப்பகுதியில் தேடியுள்ளனர்.
ஆனால் வெள்ளிக்கிழமை பகல் சிறுமி ஆதா ஷகிலின் உடல் பாகங்கள் அருகாமையில் உள்ள வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
இச்சம்பவம், குடும்பத்தாரை மட்டுமின்றி, அப்பகுதி மக்கள் அனைவரையும் உலுக்கியுள்ளது.
வனவிலங்கு அட்டகாசம் தொடர்பில் அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றே கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.