பிறந்து 8 நாட்களேயான குழந்தை.,நடுவானில் விமான பயணத்தில் உயிரிழந்த துயரம்
மொரீஷியஸில் இருந்து சென்னை வரும் வழியில், பிறந்து 8 நாட்களேயான குழந்தை விமானத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்து 8 நாட்களேயான குழந்தை
மொரீஷியஸைச் சேர்ந்த மோனிஸ் குமார் (37), பூஜா (32) தம்பதிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால், குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் தம்பதியர் கவலையில் இருந்துள்ளனர்.
பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தம்பதியர் முடிவு செய்துள்ளனர்.
விசாரணை
அதன்படி விமானத்தில் மோனிஸ் குமார், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னைக்கு பயணித்துள்ளார்.
அப்போது திடீரென பச்சிளம் குழந்தை நடுவானிலேயே விமானத்தில் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து விமானம் தரையிறங்கிய நிலையில், தகவல் அறிந்த பொலிஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட பச்சிளம் குழந்தை விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |