உக்ரைனில் கொல்லப்பட்ட 50,000 ரஷ்ய வீரர்கள்! வெளியான ஊடக தகவல்
கிரெம்ளின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, உக்ரைனில் 50,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிசியின் ரஷ்ய சேவை தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகால போர்
ரஷ்யா, உக்ரைன் இடையேயான மோதல் ஆரம்பித்து 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. எனினும் மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இப்போரில் பலியான ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை குறித்து பிபிசியின் ரஷ்ய சேவை மற்றும் சுயாதீன மீடியாஸோனா வலைத்தள ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
அதன்படி, உக்ரைனில் 50,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொள்ளப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய ஆயுதப்படை அதிகாரிகள்
2023ஆம் ஆண்டில் 27,300க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களும், 2022யில் 6,000 வீரர்களும் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில், கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 50,000 படைவீரர்களில் 3,300க்கும் மேற்பட்ட ரஷ்ய ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் அவர்களில் 390 பேர் லெப்டினன்ட் அல்லது அதற்கு மேல் பதவியில் இருப்பவர்களும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்தது 9,000 ரஷ்ய கைதிகள் போரில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |