துணையாக இருங்கள்... டயானாவின் கல்லறையை அணைத்துக்கொண்டு மேகன் மெர்க்கல் உருக்கம்
மறைந்த இளவரசி டயானாவின் 25வது நினைவு நாளில், அவரது கல்லறை மீது கைவைத்து துணையாக இருக்க வேண்டும் என மேகன் மெர்க்கல் உருக்கமாக வேண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசி டயானாவின்
இளவரசர் ஹரி தமது நினைவுக்குறிப்புகள் புத்தகத்திலேயே தொடர்புடைய தகவலை வெளிப்படுத்தியுள்ளார். 2022ல் இளவரசி டயானாவின் 25வது நினைவு நாளில் தான் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
Credit: Newsteam
இது தொடர்பில் ஹரி தமது புத்தகத்தில் குறிப்பிடுகையில், இறுதியாக என் கனவுகளின் பெண்ணை நான் வீட்டிற்கு அழைத்து வந்தேன், அதனால் அவள் என் அம்மாவை சந்திப்பாள் என பதிவு செய்திருந்தார்.
ஹரிக்கு 12 வயதிருக்கும் போது பாரிஸ் நகரில் வாகன விபத்தில் சிக்கி இளவரசி டயானா மரணமடைந்தார். டயானாவின் கல்லறை தோட்டத்திற்கு செல்லும் வழியில் தாங்கள் இருவரும் ஒரு படகில் சென்றதாக ஹரி குறிப்பிட்டுள்ளார்.
@pa
மேகன் கண்கள் மூடி பிரார்த்தனை
கல்லறை மீது பூக்கள் வைத்துவிட்டு தாம் திரும்ப, மேகன் முழங்காலிட்டு அமர்ந்து, கண்கள் மூடி, பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார் என ஹரி தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தெளிவான மனநிலையும் வழிகாட்டுதலும் வேண்டும் என டயானாவிடம் கேட்டுக்கொண்டதாக மேகன் தம்மிடம் கூறியதாக ஹரி பதிவு செய்துள்ளார்.
@getty
அத்துடன், 2017ல் சகோதரர் வில்லியம் மற்றும் தாம் இணைந்து டயானாவின் கல்லறைக்கு சென்றதாகவும், அப்போதும் இதுபோன்ற ஒரு உணர்ச்சிமிக்க தருணமாக அது இருந்தது எனவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.