பணியாளரிடம் கோபமாக நடந்துகொண்டாரா மேகன்? சமூக வலைதளத்தில் விவாதத்தை தூண்டிய வீடியோ
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் ராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த பொதுமக்களை சந்தித்தனர்.
அப்போது, மேகன் அரச உதவியாளர் ஒருவரிடம் கடுமையாக நடந்துகொண்டதைப் போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு வந்துள்ள மேகன் மார்க்கல் ஆச்சரியமளிக்கும் விதமாக, இளவரசர் ஹரி , இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோருடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை வின்ட்சர் கோட்டைக்கு வெளியே ராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த பொதுமக்களை நடந்து சென்று சந்தித்துள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாத ஆண் உதவியாளருடன் மேகன் மார்க்கலின் உரையாடலைக் காட்டும் ஒரு வீடியோ, ட்விட்டரில் மில்லியன் கணக்கான பார்வைகளை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோ மோகனின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என்ற வகையில் இருதரப்பினரிடையே விவாதத்தையும் தூண்டியுள்ளது.
மேகன் மார்க்கல் அரச உதவியாளருடன் பேசும் அந்த வீடியோ வெவ்வேறு விதமாக வெளியானது. ஒரு வீடியோவில் அவர் உண்மையில் என்ன பேசுகிறார் என்பது கேட்கவில்லை. ஆனால் அவரது முக் பாவனைகளை வைத்து அவர் உதவியாளருடன் கோபமாகவும் கடுமையாந வார்த்தைகளை பேசுவதாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது.
அவர் நடந்துகொள்வது சரியில்லை என்பது போல சிலர் சமூக வளைதளங்களில் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அனால், மற்றோரு பயனர் அதே விடியோவை மேகன் பேசுவது என்ன என்பது நன்கு கேட்கும்படியாக பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்தபிறகு, மேகன் உண்மையின் உதவியாளரிடம் தன்மையாகவும் மரியாதையான வார்த்தைகளையே பயன்படுத்தியுளார் என்பது தெரியவந்தது.
இதனால், மேகன் மார்களின் எதிர்ப்பாளர்களுக்கு மற்ற பயனர்களுக்கும் இடையே வார்த்தை போர் நடந்துள்ளது.
During an extended walkabout alongside the Prince and Princess of Wales, the Duke and Duchess of Sussex shared sympathetic words with some of the many people gathered at Windsor Castle to pay their respects. pic.twitter.com/K7zGotqtam
— Omid Scobie (@scobie) September 10, 2022
மேகனிடமிருந்து பூங்கொத்துக்களை வாங்கிக்கொள்ள வந்த அந்த பணியாளரிடம் உண்மையில் மேகன் சொல்வது என்னவென்றால் "பூங்கொத்துக்களை நானே அங்கு சென்று வைத்துவிடுகிறேன் என்று நான் அவர்களிடம் கூறியுள்ளேன், அதனால் உங்கள் உதவிக்கு நன்றி, பாராட்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.
இருப்பினும், ஒரு தரப்பினர், அங்கு கமெராக்கள் தன்னை படம் பிடிப்பதனால் மேகன் அப்படி சாதுரியமாக பேசியதாகவும், அவர் முகத்தில் ஒரு எரிச்சலான உணர்வையே வெளிப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.