சவுதி இளவரசர் பரிசளித்த காதணிகள்... மேகன் மெர்க்கலிடம் விசாரிக்கவே அஞ்சிய அரண்மனை: வெளிவரும் புதிய தகவல்
சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் திருமண பரிசாக ஹரி- மேகன் தம்பதிக்கு அளித்தது
சவுதி இளவரசரின் ரத்தக்கறை படிந்த பரிசை மேகன் மெர்க்கல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு திருமணப் பரிசாக அளிக்கப்பட்ட காதணிகள் தொடர்பில் விசாரிக்க அரண்மனை அதிகாரிகளே அஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பின்னர் இருவரும் ஓராண்டு காலம் தென்னாபிரிக்காவில் வசிக்க அரண்மனை தரப்பில் திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக அந்த திட்டம் செயற்பாட்டுக்கு வராமல் போனது.
@maxmumby
இந்த நிலையில், 2018ல் ஹரி- மேகன் தம்பதி உத்தியோகப்பூர்வ பயணமாக அவுஸ்திரேலியா, பிஜி, டோங்கா மற்றும் நியூசிலாந்து செல்ல முடிவானது. இதனையடுத்து தம்பதி இருவரும் பிஜியில் 2 நாட்கள் தங்கவும், நாட்டின் ஜனாதிபதி சிறப்பு விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.
குறித்த விருந்தில் முதன்முறையாக மேகன் மெர்க்கல் கண்ணைப்பறிக்கும் வைரத்தாலான காதணிகளை அணிந்து காணப்பட்டார். இந்த புகைப்படங்கள் வெளியானதையடுத்து அந்த வைர காதணிகள் கைமாறாக பெற்றது என கென்சிங்டன் அரண்மனை அறிக்கை வெளியிட்டது.
@shutterstock
ஆனால் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அந்த காதணிகள், சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் திருமண பரிசாக ஹரி- மேகன் தம்பதிக்கு அளித்தது என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த நிலையில் தான் 2018 அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வரவழைக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அக்டோபர் 20ம் திகதி, பிஜியில் ஹரி- மேகன் தம்பதிக்கு இரவு விருந்து முன்னெடுக்கப்படுவதற்கும் மூன்று நாட்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மரணத்திற்கு சவுதி அரேபியா தங்கள் அதிகாரிகளே காரணம் என்று ஒப்புக்கொண்டது.
@getty
இதனையடுத்து, பிஜியில் மேகன் மெர்க்கல் அணிந்த அந்த காதணி தொடர்பில் விவாதம் எழுந்தது. சவுதி இளவரசரின் ரத்தக்கறை படிந்த பரிசை மேகன் மெர்க்கல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
மேலும், பிஜியில் இருந்து திரும்பிய பின்னர் மூன்று வாரங்களில் மீண்டும் அந்த நகையை மேகன் மெர்க்கல் அணிந்துள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நவம்பர் 14ம் திகதி முன்னெடுக்கப்பட்ட மன்னர் சார்லஸின் 70வது பிறந்த நாளிலும் மேகன் மெர்க்கல் குறித்த காதணியை அணிந்துள்ளார்.
@getty
இதனிடையே இரண்டாவது முறையும் மேகன் மெர்க்கல் குறித்த காதணியை அணிந்துகொள்ள, அரண்மனை அதிகாரிகள் இளவரசர் ஹரியிடம் இது தொடர்பில் விவாதித்துள்ளனர்.
ஆனால் ஹரி, அவர்களின் குற்றச்சாட்டுகளை வியப்புடன் பார்த்ததுடன், அது குறித்து கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் மேகன் மெர்க்கலிடம் விவாதிக்கவும் அரண்மனை அதிகாரிகள் அஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது.