இடிபாடுகளில் தாய் சடலத்திற்கு அருகே உயிருடன் இருந்த பச்சிளம் குழந்தை! காசாவில் நெஞ்சை உருக்கும் சம்பவம்
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தற்போது வரை சுமார் 137 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வான்வெளி தாக்குதலில் கட்டிடம் சரிந்து விழுந்து 7 பேர் பலியானதில் 5 மாத பச்சிளம் குழந்தை மட்டும் உயிர்பிழைத்ததாக காசா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் தாயின் சடலத்திற்கு அருகே உயிருடன் இருந்த 5 மாத பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதல் ‘படுகொலை’ என ஹமாஸ் போராளிக் குழுவின் உறுப்பினரும் காசாவின் சுகாதார அமைச்சகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியை குறிவைத்து ராக்கெட்டு தாக்குதல்களை நடத்தியதாக ஹமாஸ் குழுவின் ஆயுதமேந்திய படை தெரிவித்துள்ளது.