முடிவை மாற்றிக்கொண்ட ஏஞ்சலா மெர்க்கல்! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை போட்டுக்கொள்ள சம்மதம்
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பெறுவதற்கு தாயாக இல்லை என கூறிவந்த ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.
"ஆம், நான் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை எடுத்துக்கொள்வேன், இது என் முறை வரும் வரை காத்திருக்க விரும்புகிறேன், ஆனால் நான் எப்படியிருந்தாலும் அதே செலுத்திக்கொள்ள விரும்புகிறேன்" என மெர்க்கல் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை இரவு கூறினார்.
மேலும், வைரஸின் பரவலைத் தடுக்க மிகவும் தேவையான "அவசரகால பிரேக்" முன்முயற்சியாக ஜேர்மனியின் பெரும்பாலான பிராந்தியங்களில் அடுத்த வாரம் பணிநிறுத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த மாதம் 65-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பலனளிக்கவில்லை என எழுந்த தவறான கருத்து காரணமாக அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை எடுக்க மாட்டேன் என்று கூறியபோது அவர் தலைப்புச் செய்திகளாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியால் இரத்தம் உறையும் அபாயம் இருப்பதாக பரவிய தகவல்கள் காரணமாக பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. தற்போது, European Medical Agency அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி "பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது" என தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
மேலும், EMA-வின் அறிவிப்புக்குப் பிறகு ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், லிதுவேனியா, லாட்வியா, ஸ்லோவேனியா மற்றும் பல்கேரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை விரைவில் மக்களுக்கு வழங்க தொடங்குவதாக ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.