அதிகாலை 4 மணிக்கு வந்த இ-மெயில்., 8000 பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்த Meta
Meta நிறுவனம் உலகம் முழுவதும் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Meta Platforms, உலகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ஊழியர்கள், புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கே பணிநீக்க மின்னஞ்சலை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Bloomberg வெளியிட்ட தகவலின்படி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஊழியர்களும் தங்களது நேர மண்டலத்திற்கேற்ப இதேபோன்ற அறிவிப்புகளைப் பெற உள்ளனர்.

Meta நிறுவனத்தின் Head of People Janelle Gale, சிறிய குழுக்களைக் கொண்டு வேகமாக செயல்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்காக இந்த மாற்றம் அவசியம் என தெரிவித்துள்ளார்.
மே 20-ஆம் திகதி பணிநீக்கத்திற்கு முன்பாக, ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. சுமார் 7,000 பணியாளர்களை புதிய AI சார்ந்த குழுக்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த பணிநீக்கம் பெரும்பாலும் பொறியியல் மற்றும் தயாரிப்பு குழுக்களை பாதிக்கிறது. Meta நிறுவனத்தில் மார்ச் மாத இறுதியில் சுமார் 80,000 பணியாளர்கள் இருந்த நிலையில், இப்போது 10 சதவீதம் பேர் நீக்கபட்டுள்ளதால், பெரும் மாற்றம் ஏற்படுகிறது.
நிறுவனத்தின் CEO Mark Zuckerberg, ஸ்யேர்க்கை நுண்ணறிவை (AI) நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமையாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் AI தொடர்பான முதலீடுகளுக்கு 100 பில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டுள்ளதாகவும், மொத்த செலவு 145 பில்லியன் டொலர் வரை செல்லக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பணிநீக்கம் மூலம் நிறுவனம் சுமார் 3 பில்லியன் டொலர் சேமிக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. ஆனால், ஊழியர்கள் AI தொடர்பான மாற்றங்கள் மற்றும் தரவு சேகரிப்பு முறைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |