கடற்கரையில் பெண்ணின் முகம் சிதைந்த தலை... 3,000 மைல்கள் கடந்த காதல்: அம்பலமான கொடூரம்
இணையத்தில் அறிமுகமான நபரை சந்திக்க 3,000 மைல்கள் கடந்து சென்ற பெண் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உடல் கொடூரமாக சிதைக்கப்பட்ட
மெக்சிகோ நாட்டவரான 51 வயது Blanca Arellano என்பவரே கொல்லப்பட்டு உடல் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
@dailymail
டேட்டிங் செயலி ஒன்றில் அறிமுகமான 37 வயது Villafuerte Pinto என்பவருடன் இவர் காதல்வசப்பட, அவரை சந்திக்கும் பொருட்டு பெரு நாட்டின் லிமா பகுதிக்கு பயணப்பட்டுள்ளார்.
Villafuerte Pinto மருத்துவ மாணவர் என்றே கூறப்படுகிறது. ஒருவார காலம் இருவரும் ஒன்றாக நேரம் செலவிட்ட நிலையில், அரேலானோ திடீரென்று மாயமாக, குடும்பத்தினரால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 7ம் திகதி அரேலானோ மாயமானதாக கூறப்பட்ட நிலையில், நவம்பர் 9ம் திகதி கடற்கரையில் முகம் சிதைக்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
முக்கிய உடல் உறுப்புகள்
அடுத்த சில மணி நேரங்களில் துண்டிக்கப்பட்ட விரல்களும் மீட்கப்பட, அடுத்த நாள் முக்கிய உறுப்புகள் அப்புறப்படுத்தப்பட்ட உடல் மட்டும் கடலில் இருந்து மீட்கபட்டுள்ளது.
@police
குறித்த பகுதியானது, Villafuerte கல்வி பயிலும் பல்கலைக்கழகத்தின் அருகாமையில் என்பதை உறுதி செய்த பொலிசார் அவரை உடனடியாக கைது செய்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கான கருவிகளை திறம்பட பயன்படுத்த தெரிந்த ஒருவரால் மட்டுமே முகத்தை வெட்டியெடுக்க முடியும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அரேலானோவின் ரத்தக்கறைகளும் குறித்த நபரின் குடியிருப்பில் இருந்ததை உறுதி செய்துள்ளனர்.
இருப்பினும், இந்த கொலையில் தமக்கு தொடர்பில்லை என்றே அவர் கூறி வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.