மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து 15 பயணிகள் பலி; பிரபல நாட்டில் பயங்கர விபத்து - வெளியான பகீர் புகைப்படங்கள்
மெக்ஸிகோவின் தலைநகரில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்ததில் அதில் பயணித்த ரயில் இரண்டாக பிளவடைந்து கோர விபத்துக்கு உள்ளானது.
இந்த கோர விபத்து மெக்ஸிகோ நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் குறைந்தது இரண்டு பெட்டிகள் சேதமடைந்துள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மெக்ஸிகோ நகர மேயர் Claudia Sheinbaum தெரிவித்துள்ளார்.
இடிந்து விழுந்த Metro 12 line கட்டப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டதாகவும், மேலும் அந்த ரயிலும் மிக பழமையானதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்து குறித்தது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Claudia கூறியுள்ளார். அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.