திருடர்களை டேப்பால் தூணில் ஒட்டி வைக்கும் மர்ம மனிதன் - தேடும் காவல்துறை
திருடர்களை டேப்பால் தூணில் ஒட்டி வைக்கும் மர்ம மனிதனை காவல்துறை தேடி வருகிறது.
திருடர்களை டேப்பால் தூணில் ஒட்டி வைக்கும் மர்ம மனிதன்
மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மோரேனோ நகராட்சியில் கடந்த ஜூன் 13 ஆம் திகதி ஒரு ஆண் நபர் பொதுவெளியில் உள்ள மின்விளக்கு தூணில் டேப்பால் ஒட்டபட்டிருந்தை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அவர்களின் அருகே 'திருடன்' என்று ஸ்பானிய மொழியில் குறிப்பிடும் ஒரு அட்டைப் பலகையும் இருந்தது. அவர்களின் முகத்தில் பூனை மீசை வரையப்பட்டதோடு கடுமையாக தாக்கப்பட்டு வாயில் டேப் ஒட்டப்பட்டிருந்தது.
மேலும், அவர் திருடியதாக கருதப்பட்ட ஒரு இரு சக்கர வாகனமும் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
இதே போல், ஜூன் 17 மற்றும் 19 என அடுத்தத நாட்களில் குறைந்தது 5 பேர் இவ்வாறாக கண்டறியப்பட்டனர். காயங்களுடன் இருந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களை இவ்வாறு யார் கட்டி வைத்தது இதன் பின்னணியில் உள்ளது தனிநபரா அல்லது குழுவா என காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
கட்டிவைக்கப்பட்ட 5 நபர்களிடமும் நடத்திய விசாரணையில் அந்த நபர் மாஸ்க் அணிந்திருந்தாகவும், அவரை நாங்கள் பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த நபர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே காவல்துறை கருதி வந்தாலும், அவர்கள் உண்மையாகவே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டார்களா எனவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அந்த மர்மநபரை நீதி வழங்கும் நபராக பொதுமக்கள் சிலர் புகழ்ந்து வருகின்றனர். அதேவேளையில், சட்டத்திற்கு புறம்பாக யாரும் நீதிபதியாக ஆக முடியாது என ஜலிஸ்கோவின் பொதுப் பாதுகாப்புச் செயலாளர், ஜுவான் பாப்லோ ஹெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |