கர்ப்பிணி பெண்ணை கொன்று… வயிற்றில் இருந்த குழந்தையை திருடிய கணவன் மனைவி
மெக்சிகோ நாட்டில் 20 வயதுடைய இளம் கர்ப்பிணி பெண்ணை கடத்தி, கொன்று வயிற்றில் இருந்த குழந்தையை திருடிய தம்பதியினரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி
மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் நகரில் வசித்து வரும் 20 வயதுடைய ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என்ற கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு சடலமாக பொலிஸாரால் மீட்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிய பொலிஸாருக்கு பல பகீர் தகவல்கள் தெரியவந்துள்ளது.
Rosa Isela Castro Vazquez-ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ்
ரோசா ஐசலா 8 மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்த நிலையில், அவரை கொன்சாலோ-வெரோனிகா என்ற தம்பதி சமூக ஊடகம் மூலமாக தொடர்பு கொண்டு, பிறக்கப் போகும் குழந்தைக்கு புதிய ஆடைகள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதனை உண்மையென நம்பி ரோசா ஐசலாவும், அவர்களை சந்திக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு ரோசா ஐசலா-வை சந்தித்த அந்த தம்பதி அவரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு வெளியேறியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி பதிவாகியுள்ளது.
சந்தேக வலையில் சிக்கிய தம்பதி
ரோசா ஐசலா காரில் ஏறி சென்ற பிறகு யாரும் அவரை பார்க்கவில்லை, அதே சமயம் குழந்தை பெற்று கொள்ள முடியாத சூழலில் இருந்த கொன்சாலோ-வெரோனிகா என்ற தம்பதி திடீரென குழந்தையுடன் தோன்றியது பொலிசாருக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
Gonzalo and Veronica- கொன்சாலோ மற்றும் வெரோனிகா
இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரோசா ஜசலா-வை தம்பதிகள் கடத்தி, அவரது வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இதில் ரோசா உயிரிழந்ததாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொலை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி என இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தம்பதியினரிடம் இருந்து பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த பெண் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.