பிளே ஆப்பில் கடைசி இடத்திற்கு போட்டி போடும் அணிகள்! யாருக்கு அதிக வாய்ப்பு? முழு விபரம்
ஐபிஎல் தொடரில் இனி வரும் ஆட்டங்களில் மும்பை அணி பிளே ஆப் தகுதி பெற என்ன செய்ய வேண்டும், அதுமட்டுமின்றி வேறு என்னென்ன நடக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் இந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் பாதியில் சொதப்பிய அணிகள் எல்லாம், இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக விளையாடி வருவதால், இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் ஒரே ஒரு அணி எது என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
ஏனெனில், சென்னை, டெல்லி, பெங்களூரு அணிகள் 8 வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. கடைசி இடமான நான்காம் இடத்திற்கு பஞ்சாப், கொல்கத்தா, மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் இன்னும் மும்பை அணிக்கு ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுடன் மட்டுமே போட்டி உள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் மும்பை கட்டாயமாக ஜெயிக்க வேண்டும்.
அதிலும் ரன் ரேட் அதிகமாக வைக்க வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னதாக இருக்கும் கொல்கத்தா நல்ல ரன் ரேட்டில் உள்ளது. இதில் கொல்கத்தா அணிக்கு அடுத்து ராஜஸ்தான் அணியுடன் போட்டி உள்ளது.
இப்போட்டியில் ஒருவேளை கொல்கத்தா ஜெயித்துவிட்டால், ராஜஸ்தான் வெளியில் சென்றுவிடும். ராஜஸ்தானுக்கு, மும்பை மற்றும் கொல்கத்தா இரு அணிகளுடன் போட்டி உள்ளது.
இந்த இரண்டிலுமே தோற்றுவிட்டால், பிளே ஆப் கனவு முடிந்தது.
இதனால் இதில் பெரும் சிக்கல் ராஜஸ்தான் அணிக்கே உள்ளது. அதே சமயம் ராஜஸ்தானுடன் கொல்கத்தா தோற்றுவிட்டால், ராஜஸ்தான் மும்பையை வீழ்த்திவிட்டால் எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிடும்.
இதைத் தவிர இந்த போட்டிகளில் ஏதேனும் மழை குறுக்கிட்டாலோ, வானிலை சரியில்லாமல் போனாலோ, பஞ்சாப் அடுத்து வரவிருக்கும் சென்னை அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றால், பஞ்சாப் அணி பிளே ஆப்புக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், போட்டிகள் ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெறுவதால், அங்கு இதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.