இந்தியா அசிங்கப்பட்டிருக்கும்... மழையால் தப்பிச்சுட்டாங்களே! புலம்பி தள்ளிய முன்னாள் வீரர்
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முதல் நாள் மழையால் குறுக்கிட்டதால், முன்னாள் வீரர் ஒருவர் கிண்டல் செய்யும் வகையில் டுவிட் செய்துள்ளார்.
இங்கிலாந்தின் சவுத்தாம்டனில், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. ஆனால், போட்டி துவங்குவதற்கு முன்பே தொடர்ந்து மழை பெய்து வந்ததால், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். அதுமட்டுமின்றி மழை பெய்தாலே அது நியூசிலாந்துக்கு தான் ராசி என்று இந்திய ரசிகர்கள் ஒரு வித கவலையில் உள்ளனர்.
I see India have been saved by the weather …. 😜 #WorldTestChampionship
— Michael Vaughan (@MichaelVaughan) June 18, 2021
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியா அசிங்கப்படுவதை வானிலை காப்பாற்றிவிட்டது என்று கிண்டல் செய்யும் வகையில் டுவிட் செய்துள்ளார்.
இதைக் கண்ட இந்திய ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி வருகின்றனர்.