அவரை அணியில் இருந்து தூக்குங்க! திரும்ப பார்முக்கு வர மாட்டாரு... இந்திய கிரிக்கெட் வீரரை கடுமையாக விமர்சித்த ஜாம்பவான்
இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாராவை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கூறி அவரது பேட்டிங்கை கடுமையாக விமர்சித்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் மைக்கேல் வாகன்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
மழை காரணமாக கடைசி நாளில் ஒரு பந்து கூட வீச படாமல் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய சீனியர் புஜாராவை இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், புஜாராவுக்கு இன்னும் வாய்ப்புகள் ஏன் வழங்கப்படுகிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவரது ஆட்டம் திருப்திகரமாக இல்லை.
இனிமேலும் அவர் சிறப்பான ஆட்டத்திற்கு வர முடியாது என்றே தோன்றுகிறது. இதனால் இழந்த பார்மை நிச்சயம் அவரால் மீட்டெடுக்க முடியாது.
அவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.