பாலஸ்தீன இனப்படுகொலைக்கு Microsoft ஆதரவு - நிறுவன ஊழியர் வெகுஜன மின்னஞ்சல் அனுப்பி ராஜினாமா
இத்தாலியில் உள்ள மைக்ரோசாப்ட் தரவு மையத்தில் பணியாற்றிய நூர் என்ற தொழில்நுட்ப வல்லுநர், ஆயிரக்கணக்கான சக ஊழியர்களுக்கு வெகுஜன மின்னஞ்சல் அனுப்பி ராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது கடிதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு 994 நாட்கள் ஆதரவு அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
மைக்ரோசாப்டின் ஐரோப்பிய தரவு மையங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு மற்றும் AI கருவிகளுக்கு ஆதரவளிப்பதாக நூர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள மையங்களில் பாலஸ்தீனர்களின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பெரும் அளவிலான தரவுகள் சேமிக்கப்பட்டதாகவும், பின்னர் அவை இஸ்ரேலின் தரவு மையங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பாலஸ்தீனர்களுக்கான அனுமதி கண்காணிப்பு செயலி (permit-tracking app) அயர்லாந்து சர்வர்களில் இயங்குவதாகவும், அது பயனர்களின் தொலைபேசிகளில் முழுமையான அணுகலைக் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ராஜினாமா கடிதம், மிகப்பெரிய டெக் நிறுவனங்களின் இராணுவ ஒப்பந்தங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் தொழில்நுட்ப-தொழிலாளர் போராட்டத்திற்கு புதிய தீப்பொறியாக அமைந்துள்ளது.
மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், “No Tech for Apartheid” போன்ற இயக்கங்களின் கீழ், இஸ்ரேலிய இராணுவ ஒப்பந்தங்களை எதிர்த்து வருகின்றனர்.
நூர் தனது கடிதத்தை, “இனி என் உழைப்பை இந்த குற்றங்களுக்கு பயன்படுவதை விரும்பவில்லை” என்ற கூறி முடித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் இந்த குற்றச்சாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக இந்த பதிலும் அளிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |